search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிதி மேனன்"

    என் மீது நடிகை அதிதி மேனன் கூறும் புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகர் அபி சரவணன் கூறியிருக்கிறார். #AbiSaravanan #AditiMenon
    நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-

    “நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். நான் வெளியூர் சென்றபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதிதி மேனனை என்னுடன் சேர்த்து வைக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

    திருமணம் நடக்கவில்லை என்றும், போலி பதிவு திருமண சான்றிதழ் வைத்து நான் மிரட்டுவதாகவும் அவர் கூறுவதில் உண்மை இல்லை. திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சமூக சேவைக்காக திரட்டிய பணத்தை வைத்து வீடு, கார்கள் வாங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.



    கடன் வாங்கித்தான் வீடு, கார்களை வாங்கி உள்ளேன். அதிதி மேனன் ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் கூறியுள்ளார். ஒரு டைரக்டர் மீதும் குற்றச்சாட்டு சொன்னார். அதிதி மேனனுடன் சமரசம் செய்து வைப்பதாக சிலர் காரில் அழைத்து சென்று வழக்கை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டினார்கள். அவரை எனது மனைவியாக ஏற்க இப்போதும் தயாராக இருக்கிறேன். புகாரை சட்டப்படி சந்திப்பேன்”

    இவ்வாறு அபிசரவணன் கூறினார்.
    திருமணம் செய்ததாக மிரட்டும் நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். #Aditimenon #AbiSaravanan
    கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

    இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இருவருக்கும் காதல் உண்டானது, அபி சரவணனின் செயல்பாடுகள் சரி இல்லாததால் அவரை விட்டு சில மாதங்களில் பிரிந்தேன்.



    தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தன் மீது பொய் புகார்களை அபிசரவணன் பரப்பி வருகிறார். நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்.

    அபி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்’ என்றார். 
    ×